advertisement

உலக சுற்றுச் சூழல் " தினம் - மரங்கள் நட்ட இராமநாதபுரம் கலெக்டர்

ஜூன் 05, 2025 9:35 முற்பகல் |

உலக சுற்றுச் சூழல் " தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் " உலக சுற்றுச் சூழல் " தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மரக்கன்றுகளை நடும் பணிகளை துவக்கி வைத்தார்.ஆண்டு தோறும் ஜூன் 05 -ம் தேதி " உலக சுற்றுச் சூழல் " நாளாக கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் இயற்கையை காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டை பற்றிய நேரடியான உலகளாதிய விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகின்றது. வெளிவரும் கழிவுகள், நச்சுப்புகைகள் காற்று மண்டலத்தில் கலந்து சுற்றுச்சூழலை பாசடையச் செய்கின்றன.

எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் மரக்கன்றுகளை நடவு செய்தால் உண்டாகும் நன்மைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. கோவிந்தராஜலு, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஆறுமுகம் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்  .
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement