advertisement

குப்பையில் கிடந்த தங்க சங்கிலி: உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

மே 27, 2026 9:43 முற்பகல் |

 


கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 69, பாரதி பார்க் 4-வது வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்களின் வீட்டில் இருந்த குப்பைகளை அகற்றும் போது, எதிர்பாராத விதமாகத் தங்களின் 3 பவுன் மதிப்பு உள்ள தங்கச் சங்கிலியையும் குப்பையோடு குப்பையாகத் தவறுதலாக வீசி உள்ளனர்.

குப்பை சேகரிக்கும் கோவை மாநகராட்சி பணியாளரான சக்திவேல் என்பவரிடம் தான் சேகரித்த குப்பைகளைச் பார்த்த போது அதற்குள் புதைந்து கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்தார். அதைத் தன்வசமே வைத்துக் கொள்ளாமல், சற்றும் யோசிக்காமல் உடனடியாக அதன் அசல் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அவர்கள் முன்னிலையிலேயே நேர்மையான முறையில் நகையைத் திரும்ப ஒப்படைத்தார். கண்டெடுத்த நகையை அப்படியே திரும்ப கொடுத்த தூய்மைப் பணியாளரின் இந்த உன்னத நேர்மையைக் கண்டு நெகிழ்ந்து போன உரிமையாளர்கள், அவருக்குக் நன்றி தெரிவித்தனர்.

இந்த விபரம் அறிந்து நெகிழ்ந்துபோன கோவை மாநகராட்சி ஆணையாளர், நேர்மையின் சிகரமாக விளங்கிய பணியாளர் சக்திவேலை மாநகராட்சி ஆணையர் சார்பாகப் அதிகாரிகள் பொன்னாடை அணிவித்துத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் உள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement