இந்துக்கள் ஓட்டுக்களை பெற்று கோவில்களை கிண்டல் செய்கிறார்கள் - அண்ணாமலை தாக்கு
'இந்துக்கள் ஓட்டுக்களை பெற்றுக்கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் கோவில்களை கிண்டல் செய்கிறார்கள்.' என்று மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது: இது ஒரு சாதாரணமான கூட்டம் இல்லை. ஒரு இனம் தனது குரலை உரக்க சொல்லிக் கொண்டே இருக்கிறது. தனது உரிமையை நிலைநாட்ட விரும்புகிறது. தனது வாழ்வியல் முறையை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று ஏங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்து என்பதற்காக நம் தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர் என்றும், இந்த மதத்தை பின்பற்றினால் மட்டும் நம்முடைய ஓட்டுக்களை பெற்று அதிகாரத்தில் இருந்தவர்கள் கோவில்களை கிண்டல் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்து மக்களிடையே ஒற்றுமை எப்போதும் வராது என்ற தைரியத்தில், அரசியல்வாதிகள் இன்னும் பழைய அரசியலை செய்வதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், எங்களின் வாழ்வியல் முறைக்கு பிரச்னை வரக் கூடாது எனவும், எங்களின் குழந்தைகள் பள்ளிக்கு தைரியமாக திருநீறு வைத்துக் கொண்டு செல்லவும், வட தமிழகத்தில் பள்ளிக்கு ருத்ராட்சை கொட்டை வெளியே அணிந்து செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் திரண்டு உள்ள கூட்டம், எழுச்சியை காட்டுகிறது எனவும், இது, ஆளும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான 344 கோவில்களும் அதில் அடங்கும். எங்கியாவது ஒழுக்கமாக அறநிலையத்துறையின் செயல்பாடுகள் உள்ளதா..? முருகனின் அறுபடை வீடுகளில் ரூ.50, ரூ.100 என கட்டணம் இல்லாமல் தரிசிக்க முடியுமா..? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கோவில்களில் பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும், பணமில்லாதவர்களுக்கு ஒரு மாதிரியும் நடத்தப்படுகிறது. இதை மாற்ற வேண்டும் என்று பேசியுள்ளார்.
கருத்துக்கள்