advertisement

நெல்லை : விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி எடுத்த விபரீத முடிவு

ஆக. 29, 2026 6:07 முற்பகல் |


 
நெல்லையில் விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்காததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பெருமாள்புரம் சித்தார்தர் நகரைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். தனியார் ஐ.டி. நிறுவன ஊழியரான . இவருடைய மூத்த மகள்பிளஸ்-2 படித்து விட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 7 கல்லூரிகளில் சேருவதற்காக கலந்தாய்வில் விண்ணப்பித்து இருந்தார்.அதற்கான கலந்தாய்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், மாணவிபெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தான் விரும்பிய கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை பல இடங்களிலும் தேடிப் பார்த்தனர். அவரை எங்கும் காணாததால் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதல் வீட்டுக்கு பின்னால் இருந்த குடோனில் மாணவி சுருதிலயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
 
இதையடுத்து மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement