advertisement

திருச்செந்துறை கோவிலை தெருவில் விட்ட தமிழக அரசு - பொன்மாணிக்கவேல்  கொந்தளிப்பு!

ஜூன் 06, 2025 3:04 முற்பகல் |

 

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், ஜீயபுரத்தில் அமைந்துள்ள திருச்செந்துறை கோவின் வரலாறு, தற்போதைய அவல நிலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

திருச்செந்துறை கோவிலின் முக்கியத்துவம் பலருக்கே தெரியாது என கூறிய அவர், “நேற்று மாலை 7.20 மணிக்கு மூடப்பட்ட கோவில் இன்று காலை 9 மணி வரை திறக்கப்படவில்லை. காலை 9.15க்கு பின்பு தான் முதல் விளக்கு ஏற்றப்பட்டது. எப்போதும் எரிய வேண்டிய விளக்கே அணைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

இந்த கோவிலின் சிறப்புமிக்க அம்சமாக, சோழ மன்னன் சோழப்பெருமானடிகள் பராந்தகனின் மகன் அரிகுலகேசரியாரின் மனைவி தான் இந்த கோயிலை காட்டினார். இவர் சோழநாட்டவர் அல்ல. தென் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

“மூன்று வார்த்தைகள் முக்கியம் ‘யாண்டு, 3வது இவ்வாண்டு சோழப்பெருமானடிகள்’. இந்த வரிகளைப் பார்க்கும் போதே நம் பண்டைய மரபு தெரிகிறது. ஆனால் தமிழில் வரலாற்றை படிக்க வாய்ப்பே இல்லை. நமக்கே தவிர்க்கப்பட்டு விட்டோம்” என்று தனது வேதனையை தெரிவித்தார்.மேலும், இந்த கோயிலுக்காக மங்கல வாத்திய இசைக்காக தங்கம் நனையமாக வழங்கப்பட்டு, வாசகர்களுக்கென நிலமும் ஏற்பாடு செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement