தூத்துக்குடியில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யும் சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினராக பதிவு செய்யும் சிறப்பு முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் கே.எஸ். ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் வருகை தந்த பயனாளிகளுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கியதுடன், குறித்த விவரங்களை கணினியில் புகைப்படத்துடன் பதிவேற்றம் பணிகளை மேற்கொண்டனர்.
கருத்துக்கள்