advertisement

பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் கூறியது வரவேற்கதக்கது” – செல்வப்பெருந்தகை பேட்டி!

ஜூலை 05, 2025 3:10 முற்பகல் |

 

பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் கூறியது வரவேற்கதக்கது என தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டியின் போது தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “விஜய் பாசிச பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று சொல்லியிருப்பது வரவேற்கதக்கது. கால் பதிக்க இடம் கிடைக்காதா என பாஜக, ஆர்எஸ்எஸ் துடித்து கொண்டு இருக்கிறார்கள். யாரும் வழி ஏற்படுத்திவிட கூடாது.

தமிழக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவேற்றியுள்ளது. தமிழக மக்களுக்கு எது தேவையோ, அதை இந்த அரசு செய்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியில், நிறைவேற்றாமல் உள்ள 10% வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக கஜானாவை காலி செய்த போதும் அதனை திறமையாக தமிழக அரசு கையாண்டு வருகிறது. பாஜக தொடர்ந்து தமிழக மக்களையும் தமிழக நலனையும் புறக்கணிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement