advertisement

’ஆர்சிபி கோப்பை வென்றால் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும்’ கர்நாடகா முதல்வருக்கு ரசிகர் கடிதம்!

மே 31, 2025 3:33 முற்பகல் |

 

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி கோப்பை வென்றால் அதை கொண்டாடும் வகையில் மாநில பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என கர்நாடகா முதல்வருக்கு ஆர்சிபி ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியிருப்பது வைரலாகி வருகிறது.

பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்த் மல்லன்னவர் என்ற ரசிகர், ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வென்றால் அந்த நாளை “ஆர்சிபி ரசிகர்களின் திருவிழா” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமாறு கர்நாடகா முதலமைச்சரிடம் வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்கடிதத்தில் எழுதியிருக்கும் அவர், “இந்த வருடம் ஆர்.சி.பி வென்றால், அந்த நாளை ‘RCB ரசிகர்களின் திருவிழா’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்; மாவட்டங்கள் தோறும் அந்த நாளில் ஒவ்வொரு வருடமும் கொண்டாட்டங்கள் நடக்க ஏதுவான சூழலையும் அரசு உருவாக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement