தூத்துக்குடியில் திமுக பாக முகவர்கள் கூட்டம்
திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் போல்பேட்டை கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாநகர திமுக ஆனந்தசேகரன் தலைமைவகித்தார். பகுதி செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வில்லை.
திமுக ஆட்சி அமைந்தபின் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மகளிர் உரிமைத்தொகை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் காலையில் பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு காலை உணவு திறன்மேம்பாட்டு பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பலர் ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்ச்சி என்று ஓவ்வொரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அதை நடைமுறைக்கு வந்த பின்பும் மக்களை சென்றடைகிறதா. என்று முதலமைச்சர் மாவட்டம் தோறும் ஆய்வு கள் மேற்கொண்டு வருவது மட்டுமின்றி ஓவ்வொரு மாவட்டத்திற்கும் அதற்கென்று ஓரு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மருத்துவ காப்பீடு முகாம் நடத்தப்பட்டு அந்த காப்பீட்டில் பலர் பலனடைந்துள்ளனர். இப்படி ஓவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஓரு வகையில் எல்லோரும் திமுக ஆட்சியில் பலனடைந்துள்ளனர். இதை நாம் ஞாபகம் படுத்தும் வகையில் கழக அரசின் சாதனைகளை ஓவ்வொரு குடும்ப உறுப்பினர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2026ல் முதலமைச்சரின் இலக்கான 200 தொகுதிகளை நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்காகத்தான் கனிமொழி எம்.பியை தொகுதி மண்டல பொறுப்பாளராக முதலமைச்சர் நியமித்துள்ளார். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட கழகம் முழுமையாக செய்து கொடுக்கும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், சங்கரநாராயணன், அணி துணை அமைப்பாளர்கள் நைஸ் பரமசிவம், வக்கீல்கள் ரெக்ஸ், செல்வலட்சுமி, மணி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, பகுதி அணி அமைப்பாளர்கள் மார்க்கிஸ்ட் ராபர்ட், சூர்யா, கவுன்சிலர்கள் பொன்னப்பன், கண்ணன், ராமர், இசக்கிராஜா, கனகராஜ், அதிஷ்டமணி, சோமசுந்தரி, வட்டச்செயலாளர்கள் மந்திரகுமார், செந்தில்குமார், பத்மாவதி, பொன்னுச்சாமி, பாலகுருசாமி, பொன்பெருமாள், முன்னாள் கவுன்சிலர் அந்தோணிராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்