திருச்செந்தூர் கோவிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கல்
ஜூன் 02, 2025 6:38 முற்பகல் |
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 2) திருச்செந்தூர் முருகன் திருக்கோயிலில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, காய்ச்சிய பாலை பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்