advertisement

இந்தியாவின் தேசிய மொழி என்ன? ஸ்பெயினில் கனிமொழி அளித்த பதில் வைரல்!

ஜூன் 04, 2025 5:46 முற்பகல் |

 

ஸ்பெயினில், ‛இந்தியாவின் தேசிய மொழி எது?'' என்று கேள்வி எழுப்பியதும், அதற்கு கனிமொழி கொடுத்த பதிலும் இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி நட்பு நாடுகளிடம் எடுத்து கூறவும், பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்கவும் 7 எம்பிக்கள் குழுக்கள் வெளிநாடுகளில் பயணித்து வருகின்றன.

அதில், கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த எம்பிக்கள் குழு ஸ்பெயினுக்கு சென்றது.அப்போது, பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிரான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றியும் கனிமொழி அந்தநாட்டின் பிரதிநிதிகளிடம் கூறினார். அங்கு, திமுக எம்பி கனிமொழியிடம், புலம்பெயர் இந்தியர் ஒருவர் இந்தியாவின் தேசிய மொழி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கனிமொழி எம்பி, ‛‛இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருப்பது தான். இதுதான் உலகிற்கு இந்த குழு தரும் செய்தி. இதுவே இன்றைக்கு மிக முக்கியமான விஷயம்'' என்றார். அவர் பதிலளித்த அடுத்த நொடியே அரங்கில் இருந்தவர்களின் கை தட்டலையும் பெற்றது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement