advertisement

தேனியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு: முதியவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஜூன் 04, 2025 6:55 முற்பகல் |

 

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 59 வயது முதியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் வைரவன் (59). இவர் கடந்த 2024ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதோடு, நடந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இந்த சம்பவத்தை் பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையானது முடிவுற்ற நிலையில், முதியவர் குற்றவாளி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்திய தண்டனைச் சட்டம் 376 (A) கீழ் ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் 506 (ii) கீழ் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் விதித்ததோடு அபராத தொகையாக 12 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. 

மேலும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியதோடு இந்த தண்டனைகள் அனைத்தையும் வாழ்நாள் காலம் முழுவதும் சிறை (சாகும் வரை) தண்டனை விதிக்கப்படுவதாக போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.மேலும்சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்காக தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில் ரூ.2 லட்சம் சிறுமியின் பராமரிப்பு செலவிற்காக உடனடியாக வழங்க வேண்டும், மீதமுள்ள ரூ.8 லட்சத்தை சிறுமியின் எதிர்கால வாழ்விற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement