கமலை கேள்வி எழுப்பிய நீதிபதி என்ன மொழியியல் வல்லுநரா?; -சீமான் ஆவேசம்
கமல்ஹாசன் கன்னடமொழி குறித்து பேசியது சர்ச்சையாகி உள்ளது, இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''தமிழுடன் சம்ஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் கன்னடம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் நிரூபிக்க சான்றுகள் இருக்கிறது. அதேபோல் கன்னட மொழி எப்படித் தோன்றியது; அதன் தொடக்கம் என்ன என சான்றுடன் நிரூபித்தால் இதில் ஒரு பேச்சும் இல்லை. அதைவிட்டுட்டு நீங்கள் என்ன மொழியில் வல்லுநரா என்று கேட்டால் கேள்வி எழுப்பிய நீதிபதி என்ன மொழியியல் வல்லுநரா?
கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்க மனமில்லையா உங்களுக்கு? கர்நாடக மொழியியல் அறிஞர்கள் வாதப்பூர்வமாக, சான்றுபூர்வமாக நிரூபித்தால் இப்படி பேசுவதை விட்டுவிடுகிறோம். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது. கேட்டால் அது தனிப்பட்ட நபரின் மன்னிப்பாக இருக்காது. தமிழினம் அவமானப்படுவதாக ஆகிவிடும். நாங்கள் எல்லோரும் கமல்ஹாசனுக்கு துணை நிற்போம்' என்றார்.
கருத்துக்கள்