பரமக்குடி இரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் - நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் கோரிக்கை
பரமக்குடி இரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை தேவை . மத்திய ரயில்வே அமைச்சருக்கு பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் கோரிக்கை வைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக செயலாளர் எம்.புரோஸ்கான் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ் னவுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளதாவது :
கடந்த ஓராண்டு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வாராந்திர ரயில்கள் , சிறப்பு ரயில்கள் பரமக்குடியில் நிற்காமல் செல்கிறது.பரமக்குடி ரயில் நிலையம் , இராமேஸ்வரம் முதல் மானாமதுரை வரையிலான ரயில் நிலையங்களை விட என்எஸ்ஜி 4 என்ற மேம்படுத்தப்பட்ட தரத்தை கொண்டது.
மேலும், இளையான்குடி, முதுகுளத்தூர், கமுதி,சாயல்குடி போன்ற ஊர்கள் பரமக்குடியை சுற்றிலும் அமைந்து உள்ளது. கடந்த 2003-2004 ஆம் நிதியாண்டில் பரமக்குடி ரயில் நிலையத்தில் ரூ.10,15,54,830/- வருவாயும், 5,83,334 பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இத்தனை பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயல்நிலையத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வாராந்திர , சிறப்பு ரயில்கள் பரமக்குடி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வது பயணிகள் மத்தியில் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளதுடன், அவர்கள் ராமநாதபுரம், மானாமதுரை ரயில் நிலையம் சென்று ரயிலில் செல்லும் போது மன உளைச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
பரமக்குடி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரயில்களின் விபரம்
1. 07695/07696 - செகந்திராபாத் வாராந்திரம்
2. 07355/07356 -ஹீப்ளி வாராந்திரம்
3. 20497/20498 - பிரோஸ்பூர் கண்டோன்மென்ட் வாராந்திரம்
4. 22613/22614 - அயோத்தி கண்டோன்மென்ட் வாராந்திரம்
5. 22535/22536 - பனாரஸ் எக்ஸ்பிரஸ் வாராந்திரம்
6. 22622 - கன்னியாகுமரி - இராமேஸ்வரம் (ஒரு மார்க்கம்)
7. 06105/06106 - விழுப்புரம்- இராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஆகியவைகள் ஆகும்.
மேற்கண்ட அனைத்து ரயில் வண்டிகளும் பரமக்குடி நகரில் நின்ற செல்ல வலியுறுத்தி மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக செயலாளர் எம். புரோஸ்கான் கோரிக்கை வைத்து வலியுறுத்தி கூறியுள்ளார் .
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்