தூத்துக்குடியில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
தூத்துக்குடி தாலுகாவில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தொடர்பாக நாளை (ஜூன் 4) மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்துக்கே வந்து செயலாற்றும் வகையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை அறிவித்து உள்ளார். அதன்படி மாவட்ட ஆட்சியர், மாவட்ட அலுவலர்களுடன் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்வார்.
அதன்படி தூத்துக்குடி தாலுகாவில் வருகிற 18-ம் தேதி ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளார். இதனால் பொதுமக்களிடம் இருந்து வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பெற உள்ளனர்.
இந்த குழுவினர் தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் மற்றும் முடிவைத்தானேந்தல், கீழத்தட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றில் மனுக்கள் பெற உள்ளனர். எனவே பொதுமக்கள் அந்த இடங்களுக்கு சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை குழுவினரிடம் கொடுத்து பயனடையலாம் என்று தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன் தெரிவித்து உள்ளார்.
கருத்துக்கள்