advertisement

அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கு தீர்ப்பு : அமைச்சர் கீதாஜீவன் வரவேற்பு

ஜூன் 02, 2025 6:59 முற்பகல் |

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்றுள்ளார். 

தூத்துக்குடியில்  அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை இன்று தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால்  நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இன்று வேகமாக ஐந்து மாதத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெண்களை இழிவாக கருதி மோகப் பொருளாக எண்ணும் சமூக விரோதிகளுக்கு எல்லாம் இது தகுந்த பாடமாக இருக்கும். முதல்வர் கூறியது போல வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு  இன்று சரியான தண்டனையை வழங்கப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கையாக கருதப்படுகிறது. 

பெண்கள் இனி தைரியமாக புகார் கொடுக்கலாம். பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கும் ஆண்கள் பற்றிய புகார் கொடுக்க பெண்கள் முன் வருவார்கள். என்று தெரிவித்தார்.  

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement