தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.29,85,000 மதிப்பலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (02.06.2025) நடைபெற்றது. துமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் 15 நாட்கள் Advance course முடித்த 15 சிறுபான்மையின மகளிருக்கு பயிற்சி பெற்றதற்கான பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் ரூ.84 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ் ம. ஷியா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்