advertisement

திருச்சி மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி-ஆட்சியர் தகவல்

ஜூன் 02, 2025 9:18 முற்பகல் |

திருச்சி மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நலமாக உள்ளனர் என அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முத்துசாமி மேல்நிலைப் பள்ளியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் போன்றவற்றை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரதீப் குமார், "திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7.79 லட்சம் புத்தகங்கள், 1,33,928 சீருடைகள், 2,41,282 புத்தக பைகள் இன்று வழங்கப்பட உள்ளது" என்று கூறினார். 

தற்போது பரவும் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் இருந்து 300 மீட்டர் தூரம் வரை புகையிலை பொருட்கள் விற்க தடை உள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும். கடை உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள். கல்வி நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல், தேவைப்படும் இடங்களில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும் என்று ஆட்சியர் கூறினார்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் முழுமையாக நிறைவடைந்த பின்னரே பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement