ஷிபா மருத்துவமனை சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் இன்று மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முகம்மது ஷாபி தலைமை தாங்கினார். புகையிலை எதிர்ப்பு தின சிறப்பு செய்தியினை மருத்துவமனையின் புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவர் முஹம்மது இப்ராஹிம், அறுவைசிகிச்சை மருத்துவர் அஜெய்ரெக்ஸ், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் நிரஞ்ச் மகளிர் நல மருத்துவர் ஷரோன் ரோஸ் ஜோனெட்டா ஆகியோர் வழங்கினர். சிறப்பு விருந்தினராக நெல்லை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி மருத்துவர் புஷ்பராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.
புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வாகனம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஷிபா மருத்துவமனையில் தொடங்கி நெல்லை முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டது. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவ மனையின் மார்கெட்டிக் பிரிவினர் செய்திருந்தனர்.
கருத்துக்கள்