மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ளது-மேயர் தகவல்
பள்ளி திறப்பையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் சாமுவேல்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையா் மதுபாலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் கடந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகாித்துள்ளது. இரண்டு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று பலா் சாதனை படைத்துள்ளனா். அதே போல் திறனாய்வு தோ்வின் மூலமும் தோ்ச்சி பெற்றவா்களை ெகளரவித்துள்ளோம். எதிர்கால தலைமைமுறையினாின் நலன் கருதி நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்து கல்வியின் தரத்தையும் உயர்த்தும் வகையில் தலைமை ஆசிாியா், உதவி ஆசிாியா்கள், ஆசிாியா்கள் நல்லமுறையில் பணியாற்றி வருகின்றனா். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லாதுறையையும் சிறப்பான முறையில் கண்காணித்து வழிநடத்தி செல்கிறாா்.
பின்னா் அம்பேத்கா் நகா் பகுதியில் நடைபெறும் பணிகளையும் சிவ அரசு பள்ளிகளில் ஆய்வுகளையும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக மாநகா் முழுவதும் மேற்கொண்டாா். அப்போது சாமுவேல்புரம் பகுதியில் உள்ள ஓரு மாணவன் உங்களோடு நான் ஓரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். என்று மேயாிடம் கேட்டுக்கொண்டாா். உடனடியாக அவனை மேயரும் ஆணையரும் அரவணைத்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனா் பின்னா நல்ல பழக்க வழக்கத்துடன் படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினாா்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன், நகர அமைப்பு திட்ட உதவி பொறியாளர் முனீர் அகமது, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ். சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளா்கள் ராஜசேகா், ராஜபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ். ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்