advertisement

ஆர்சிபி வெற்றிப் பேரணி: கூட்ட நெரிசல் போலீஸ் தடியடி

ஜூன் 04, 2025 1:13 பிற்பகல் |

 

ஆர்சிபி வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள்10 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர் தலைமையில் சின்னசாமி திடலில் பாராட்டு விழா நடைபெறுகிறது. கர்நாடக பேரவையிலிருந்து தொடங்கும் வெற்றிப் பேரணி சின்னசாமி திடல் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பலர் சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்றதால் அவர்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர்.இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். நிகழ்விடத்திலேயே 3 பேர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் பலியானதாகவும் உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement