advertisement

விமான விபத்து- அகமதாபாத்திற்கு செல்லும் பிரதமர் மோடி!

ஜூன் 13, 2025 3:39 முற்பகல் |

 

இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளான அகமதாபாத்திற்கு, பிரதமர் மோடி இன்று செல்கிறார்.

லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டுள்ளது . லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைவதுதான், போயிங் 787- 8 ட்ரீம்லைனர் விமானத்தின் பயணத்திட்டம். இந்த விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 230 பயணிகள், விமானி சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர், பணியாளர்கள் 10 பேர் என, மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்தனர். இந்த விமானம் விழுநது விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,

“அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, வருத்தப்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மனம் நொறுகியது. இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் பற்றியே எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அங்கு பணியாற்றும் அமைச்சர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement