advertisement

புதிய துணை ஜனாதிபதி தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

செப். 09, 2025 7:19 முற்பகல் |


 
மராட்டிய கவர்னர் சிபி ராதாகிருஷணன், சுப்ரீம்கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவுகிறது.
 
துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.நா இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதையடுத்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.நாடாளுமன்றத்தில் சிறு கட்சிகளும், 3 சுயேட்சைகளும் உள்ளனர். அவர்கள் உள்பட 23 எம்.பி.க்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. அந்த வாக்குகளும் சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தால், அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எப்-101 என்ற அரங்கில் வைத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி. சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓட்டுப்பதிவை கண்காணிப்பார். ஓட்டு போடுவதற்காக அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement