என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!
ஜூன் 19, 2025 11:45 முற்பகல் |
என் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 விழுக்காடு பொய்யானவை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.
சேலத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, சேலம் எனக்கு பிடித்த மாவட்டம், நான் படித்த மாவட்டம். பா.ம.க. தனித்துப் போட்டியிட்ட போது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த மாவட்டம். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு 100 சதவீதம் பொய் எனவும், இந்த சமுதாயத்திற்காக, கட்சிக்காக என் மனம் மிகுந்த சுமையை சுமந்துக் கொண்டிருக்கிறது.
கட்சியின் உறுப்பினர் சேர்க்கையைதீவிரப்படுத்த வேண்டும். சித்திரை பெளர்ணமி மாநாடு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. வன்னியர் சமுதாய மக்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்று கூறினார்.
கருத்துக்கள்