அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்” – ராமதாஸ் விளக்கம்!
பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு திமுகவே காரணம் என அன்புமணி பேசியது குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.
முதல் கேள்வியாக பாமகவில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுடன் பேசினீர்களா? என்கிற கேள்வியை முன் வைத்தனர். அந்த கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ் ” அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பேசினேன். நன்றாக இருக்கிறார்கள்” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாமக குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி சொன்னது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ” அதற்கு அன்புமணி அப்படி கூறுவது அப்பட்டமான பொய்..கடைந்து எடுத்த பொய் அவ்வளவு தான்” என கூறி விளக்கம் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து இனிமேல் என்னிடம் கேள்வி கேட்டு ஊடக நண்பர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கிறேன் எனவும் வேண்டுகோள் வைத்தார். அதன்பின், அன்புமணி மன்னிப்பு கேட்டதால் குழப்பம் தீருமா என்ற கேள்விக்கு, “போகப் போகத் தெரியும்,” என்று பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பதிலளித்துவிட்டு சென்றார்.
கருத்துக்கள்