advertisement

செஞ்சிலுவை சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி! -நெல்லையில் பரபரப்பு பேட்டி

ஜூன் 19, 2025 9:24 முற்பகல் |

 

செஞ்சிலுவை சங்க முன்னாள் உறுப்பினர்கள் முன்னாள் சேர்மன் டாக்டர். சார்லஸ் பிரேம்குமார் தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்கள். இச்சந்திப்பில் அவர்கள் கூறியதாவது ; கடந்த 2020 மார்ச் மாதல் முதல் கொரானா உள்ளிட்ட பல காரணங்களால் சங்கத்தின் பொதுக் குழு நடத்தப படாமல் இருந்தது. சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் வரும் ஜூன் ௨௧ அன்று சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியரின் அறிவிப்பு வெளியானது.பல உறுப்பினர்களுக்கு தபாலில் அழைப்பு வந்த நிலையில் பல மூத்த உறுப்பினர்கள் உட்பட பலருக்கும்அழைப்பு வராதது பெருங்குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சில முறை சென்று பட்டியலைக் கேட்ட போது சில காரணங்களைக் கூறி தட்டிக் கழித்த நிலையில் கடந்த வாரம் வெளியிடப் பட்ட பட்டியலைப் பார்த்த உறுப்பினர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.2013-2014 ஆம் ஆண்டுக்குரிய அப்பட்டியலில் அதன் பின்னர் சேர்ந்த உறுப்பினர்களின் பெயர்கள் சேர்க்கப் படாததோடு மட்டுமின்றி பல மூத்த உறுப்பினர்களின் பெயர்கள் கருப்பு மை இட்டு அழிக்கப் பட்டு இருந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கடந்த ஆண்டு செப்டம்பர் 2024 அவசரமாக கூட்டப் பட்ட பொதுக் குழுவிலும் இதே பழைய பட்டியலைக் கொண்டு சில உறுப்பினர்களுக்கு அனுப்பியும் சில உறுப்பினர்களுக்கு அனுப்பாமல் அது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் கோட்டாட்சியரிடமும் முறையிட்டும் பலனில்லாமல் பொதுக் குழு கூடிய நிலையில் பெயர் நீக்கப் பட்ட உறுப்பினர்கள் கோட்டாட்சியர் முன்னிலையில் தர்ணாவில் ஈடுபட்டு பல உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அக்கூட்டம் கோரம் இல்லாமல் ஒத்தி வைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடந்த கால தவறுகளையே இம்முறையும் மீண்டும் செய்து இருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் சங்க உறுப்பினர்கள் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் , மேதகு ஆளுநர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.  மேலும் 14 ஜூன் அன்று மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் , மேதகு ஆளுநர், செஞ்சிலுவை சங்க மாநிலக்கிளையின் செயலர் மற்றும் தலைவருக்கு பதிவுத் தபாலில் வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும் கடந்த 16 அன்று செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவரும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்தும் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறினர். அதோடு கோட்டாட்சியரின் தனி அலுவலரையும் நேரில் சந்தித்து இது குறித்து எடுத்துக் கூறிய நிலையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப் படும் என்ற நம்பிக்கையில் கலைந்து சென்றனர்.  

இதில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  சங்க நிர்வாகக்குழுவால் முறைப்படி இணைக்கப் பட்ட ஒரு புரவலர் உட்பட 31 உறுப்பினர்கள்  அவர்களுக்குரிய சந்தா தொகை மாநிலக் கிளைக்கு அனுப்பப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் உள்ள நிலையில் அவர்கள் பெயர்களும் பட்டியலில் நீக்கப் பட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு. ராம்நாத் கோவிந்த் அவர்களின் கையோப்பம் இட பட்ட 2019 ஆம் ஆண்டு உறுப்பினர் சான்றிதழ் வைத்துள்ள புரவலர் டாகடர். ராஜா விக்னேஷ் அவர்களின் பெயரும் இப்பட்டியலில் நீக்கப் பட்டு இருப்பது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது .

தென்காசி தனி மாவட்டமாக அங்கீகரிக்கப் பட்டு செயல்ப்பட்டு வரும் நிலையில் தென்காசி தனி சங்கமாக செயல்பட்டு வரும் நிலையில்  தென்காசி மாவட்ட உறுப்பினர்கள் பலருக்கும் பொதுக் குழு அழைப்பிதழ் அனுப்பப் பட்டு  உள்ளது குளறுபடிகளின் உச்சக்கட்டம்.

இப்பட்டியலில் கடந்த காலங்களில் இயற்கை எய்திய பல உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப் படாமலும், தென்காசி மாவட்ட உறுப்பினர்களின் பெயர்களும் நீக்கப் படாமல் இருப்பது மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுள் உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு இருப்பது   இப்பட்டியல் சரியான பட்டியல் அல்ல என்பது நிரூபணமாகிறது.

செஞ்சிலுவை சங்கத்தின் பொதுக் குழுவும் தேர்தலும் நியாயமான முறையில் முறைப்படி நடக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இப்பட்டியலில் நீக்கப் பட்ட பழைய உறுப்பினர்கள் பெயர்கள் இணைக்கப் பட்டு, இயற்கை எய்திய உறுப்பினர்களின் பெயர்களும், தென்காசி மாவட்ட ஆயுள் உறுப்பினர்களின் பெயர்களும் நீக்கப் பட்டு புதிய பட்டியல் வெளியிடப் பட்ட பிறகு முறையான அறிவிப்பு கொடுத்து சங்கத்தின் பொதுக் குழு நடத்தப பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்கள்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர். பிரேமசந்திரன், ஆனி றெக்லான்ட், கிலாடிஸ் ஸ்டெல்லா பாய், நவாஸ், ஜெய பிரகாஷ், இப்ராகிம்,மூர்த்தி, Dr.ஆப்ரகாம் ஜேம்ஸ், ஜெபசிங், ராஜ்குமார் அருளானந்தம், கிறிஸ்டோபர், பஷீ்ர், அப்துல் ரஹ்மான், வண்ணமுத்து, சங்கர மூர்த்தி உள்ளிட்ட பலர் கல்ந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement