ராமநாதபுரத்தில் இரத்த தானம் செய்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குருதி கொடையாளர் தினத்தையொட்டி இரத்த தானம் செய்தவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டுச் சான்று, நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் , ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி, இரத்ததானம் செய்த நபர்களுக்கு பாராட்டுச்சான்று , நினைவு பரிசு வழங்கி பாராட்டியதுடன், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சிவப்பு கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றனர்.பேரணியில், 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், கல்லூரி மாணவியர்கள் பங்கேற்று இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தடைந்தனர்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதாராணி , கண்காணிப்பு மருத்துவ அலுவலர் மரு.ஜவகர் , மருத்துவ அலுவலர்கள் மரு.மனோஜ்குமார் , மரு.சிவகுமார் , மரு.கண்ணகி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், இரத்த தான கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்