மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை: நீதிமன்றம் உத்தரவு
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாகன பாஸ் தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை காவல்துறையிடம் சமர்ப்பித்துவிட்டு மாநாட்டில் பங்கேற்கலாம். முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று பிறப்பித்த உத்தரவில் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு
மதுரையில் நாளை மறுநாள் (ஜூன் 22) ஞாயிற்றுக்கிழமை முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் வாகன பாஸ் வாங்கி வர வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து இந்து முன்னணி மேல்முறையீடு செய்தது.
இந்து முன்னணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு வாதத்தை முன்வைத்தார். வாகனத்தில் வருபவர்கள் முறையான வாகன அனுமதி பாஸ் வைத்திருந்தால் மட்டுமே மதுரைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மதுரை அண்ணா நகர் காவல் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்ததாக அவர் கூறினார். மேலும், இந்த உத்தரவு பிறப்பிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் வாதிட்டார். அரசியல் கட்சிகளுக்கு இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜரானார். அவர் கூறுகையில், "இது போன்று அதிக அளவில் பொது மக்கள் கூட கூடிய மாநாடுகளுக்கு வரக் கூடிய வாகனங்களை முறைப்படுத்துவது அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை" என்றார். மேலும், தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் இது போன்ற உத்தரவுகளை வழங்கலாம் என சட்டம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த உத்தரவு வாகனங்களை கட்டுப்படுத்த அல்ல, முறைப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்தார்.
கருத்துக்கள்