பரமக்குடி தனியார் வியாபார ஸ்தலங்களில் சார் ஆட்சியர் திடீர் சோதனை
பரமக்குடி நகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் வியாபார ஸ்தலங்களில் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் திடீர் சோதனை நடத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கோட்டத்தில் உள்ள சில தனியார் வியாபார ஸ்தலங்கள் உரிமம் இல்லாமலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும், உணவு வகைகள் குறித்தும் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌருக்கு நுகர்வோர்கள் புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர். அதனடிப்படையில், முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரில் தனியார் சூப்பர் மார்க்கெட்டுகள், மெடிக்கல் ஷாப், உணவு விடுதிகள் பேக்கரிகள் ஆகியவற்றை பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் தலைமையில் திடீர் சோதனையில் செய்யப்பட்டனர்.
சோதனையில், ஒரு சில வியாபார ஸ்தலங்களில் தேதி முடிவுற்ற பொருட்கள் விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டு அதிர்ச்சியடைந்தார். சோதனையின் பொழுது, பரமக்குடி வட்டாட்சியர் வரதன், பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் வெண்ணிலா உள்பட காவல் துறையினர் உடன் இருந்தனர். சில கடைகளில் உணவு மாதிரிகள் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் ஃபயர் சேஃப்டி உரிமம் , பரமக்குடி நகராட்சியில் இருந்து உரிமம் இல்லாதது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட கடை முதலாளி , மேலாளர்களுக்கு மேற்கண்ட உரிமங்களைப் பெற 15 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.
மேலும் , தொடர் நடவடிக்கையாக பரமக்குடி கோட்டத்தில், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய வட்டங்களில் இது போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது . பரமக்குடி நகரில் தனியார் வியாபார ஸ்தலங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டது பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கெளருக்கு நுகர்வோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது .
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்