பரமக்குடியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டும் - மா.கம்யூ.,வலியுறுத்தல்
பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை வைத்து வலியுறுத்தி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி. இராஜா அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்து வலியுறுத்தி கூறியுள்ளதாவது :ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி நகர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டது. சிபிஎம் போராட்டம் , நீதிமன்ற உத்தரவால் 3 கடைகளும் அகற்றப்பட்டன. அதன் பின்பு மது இல்லா பரமக்குடி நகர் பகுதி என உருவானது. இது அப்படியே தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பரமக்குடி நகரில் புதிய மதுபான கடை அமைக்க இனிமேல் நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை வைத்த மனுவை நகர்மன்ற கூட்ட தொடர் நடைபெற்று கொண்டிருந்த போது கொடுக்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் உடனே அக்கடிதத்தை நகர்மன்ற கூட்டத்தில் வாசித்து சிபிஎம் கோரிக்கை ஏற்று கொள்ள படுகிறது. இனி பரமக்குடி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தது பத்திரிக்கை செய்தியானது.
அதற்கு பிறகு தொடர்ந்து , எஸ்பிஎம் தியேட்டர் , ஆற்று பாலம், கிருஷ்ணா தியேட்டர் என டாஸ்மாக் கடைகளும் ரயில்வே பீடர் ரோட்டில் மனமகிழ் மன்றம் (எப்எல்2) வரிசையாக வந்தது. தற்போது நகரின் மைய பகுதி பொதுமக்கள் குடியிருப்பு, 10 மீட்டர் தூரத்தில் தனியார் வங்கி, 50 மீட்டர் தூரத்தில் முருகன் கோவில் , விநாயகர் கோவில், 100 மீட்டர் தூரத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி, சுற்றிலும் வீடுகள் , 10 மீட்டரில் பழைய தேசிய நெடுஞ்சாலை இருக்கும் பகுதியில் புதிதாக கமுதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் கடை எண் 6912 யை மாற்றம் செய்து இப்பகுதியில் அமைக்கும் முயற்சி நடந்து வருவதாக அறிகிறோம். இம் முயற்சியை டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தடுத்திட வேண்டும். இக்கடை இங்கு திறக்கப்பட்டால் கடும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும். நகராட்சி நிர்வாகம் இனிமேல் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க மாட்டோம் என சொல்லிவிட்டு இக்கடைக்கு எப்படி அனுமதி கொடுத்தது. நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தால் கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சியில் கூட இவ்வாறு இல்லை என பொதுமக்கள் பேசும் அளவில் ஆளும் கட்சி நகர்மன்றதாலே திமுக அரசிற்கு கெட்ட பெயர் உருவாகி வருகிறது. 2026 தேர்தல் வரும் நேரத்தில் மக்கள் மனம் புண்படும் மோசமான செயலான டாஸ்மாக் கடை திறப்பது என்பது வாக்கு வங்கியை சிதறடிக்கும் என்பதை ஆளும் அரசும் , அரசின் மக்கள் பிரதிநிதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே , டாஸ்மாக் 6912 கடையோ, மாற்று கடையோ கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் அமைப்பதை கைவிட வேண்டும். மீறி அங்கு கடை திறக்கப்படுமானால் பொது மக்களை திரட்டி அக்கடையை பூட்டு போட்டு பூட்டும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்துவோம். அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு டாஸ்மாக் நிர்வாகமும், நகராட்சியுமே பொறுப்பேற்க வேண்டும். மேலும் ,
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும்,பரமக்குடி சார் ஆட்சியரும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கேட்டு கொள்கிறோம் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி. இராஜா வலியுறுத்தி கூறியுள்ளார் .
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் .
கருத்துக்கள்