advertisement

தர்மபுரி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த நண்பர்கள் கைது...!

ஜூன் 20, 2025 1:58 முற்பகல் |

 

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த 22 வயதான டிரைவர் 'சரவணன்'என்பவர். அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் 19 வயதான செந்தமிழ் என்பவர்.  இவர்கள் இருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அக்காள்- தங்கைகளான பிளஸ்-2 மாணவிகள் 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், நட்பாக பேசி பழக தொடங்கிய அவர்கள், சில தினங்களில் அந்த மாணவிகளிடம் ஆபாசமாக பேசியுள்ளனர்.ஒரு கட்டத்தில் அவர்கள் வாட்ஸ்அப் வீடியோ காலிலும் பேசி வந்துள்ளனர். அப்போது, அந்த மாணவிகளை சரவணன், செந்தமிழ் இருவரும் நிர்வாணமாக நிற்க சொல்லி வீடியோ காலில் படம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பிறகு, அந்த ஆபாச படங்களை காட்டி தாங்கள் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டியதாக தெரியவந்துள்ளது.இதனிடையே,அந்த ஆபாச படங்களை சரவணன், செந்தமிழ் இருவரும் அவர்களது நண்பர் வெங்கடேஷ் (24) என்பவருக்கு அனுப்பியுள்ளனர்.

வெங்கடேஷ் அந்த படங்களை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததாக தெரிகிறது.இந்த ஆபாச படங்கள் வாட்ஸ்அப் குழுவில் பரவி வருவதை அறிந்த அந்த மாணவியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாணவிகளின் தந்தையிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாணவிகளின் தந்தை காவலில்  புகாரளித்தனர். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சரவணன், செந்தமிழ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement