advertisement

சென்னை -வெடித்துச் சிதறிய வாஷிங் மெஷின்... பற்றி எரிந்த வீடு

மே 30, 2025 7:17 முற்பகல் |

 

கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மிஷினில் பயங்கர தீ விபத்து. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது.

சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி - சாந்தி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர் மூர்த்தி கூலி வேலை செய்து வரும் நிலையில், நேற்று பிற்பகல் வீட்டில் இருந்த வாஷிங்மெஷினில் சாந்தி துணியை போட்டு ஓட விட்டுள்ளார். அளவுக்கு அதிகமான துணிகளை போட்டதால் திடீரென மிஷினில் பழுது ஏற்பட்டு மின்கசிவால் திடீரென தீப்பற்றியுள்ளது.

வாஷிங் மெஷினில் ஏற்பட்ட தீ முழுவதும் பரவி வீட்டில் உள்ள கட்டில் பீரோ ஏசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களிலும் பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த வாஷிங் மெஷின் வெடித்துச் சிதறியதால் வீடு முழுவதும் தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமான நிலையில், நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த சாந்தி காயமின்றி உயிர் தப்பினார் இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement