advertisement

சென்னையில் சிடி ஸ்கேன் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்!

மே 30, 2025 8:47 முற்பகல் |

 

சென்னையில் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சி.டி. 'ஸ்கேன்' எடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததால் அந்த அறைக்குள் சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த ஊழியர், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்நிகழ்வால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளார். இதுகுறித்து சோழவரம் காவல் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் வழக்குப்பதிவு செய்தார்.

மேலும்,செங்குன்றத்தை அடுத்த வழுதிகம்பேடு பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியர் ராஜ்குமார் (32 வயது) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement