திலகபாமா நீக்கம்.. பாமகவில் அடுத்தடுத்து திருப்பம்!
பாமக பொருளாளர் பொறுப்பிலிருந்து திலகபாமா நீக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல், நேற்று வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டது. தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இதற்கிடையே பாமக பொருளாளர் பொறுப்பிலிருந்து திலகபாமா நீக்கப்பட்டிருப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக சையது மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ராமதாஸால் திலகபாமா கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் அப்பதவியில் தொடருவார் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பாமக பொதுக்குழு என்னை முறைப்படி தேர்வு செய்து தலைவராக தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்துள்ளது. பாமகவில் நிர்வாகிகளை நியமிக்க நீக்க தலைவரான எனக்கே அதிகாரம் உள்ளது. பாமக பொருளாளர் பதவியில் திலகபாமாவே நீடிப்பார்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்