தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025: துணை முதலமைச்சர் திறந்து வைப்பு..!
“தமிழ்நாடு மீன் உணவு திருவிழா 2025” தீவுத்திடலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் 30.05.2025 முதல் 01.06.2025 வரை 03 நாட்களாக நடைபெறவுள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி, அ.வெற்றியழகன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் ந.கௌதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் என்.சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் இரா.கஜலட்சுமி, தேசிய மீன்பிடி மேம்பாட்டு வாரிய தலைமை நிர்வாகி பிஜய் குமார் பெஹரா உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அங்கு, சமயற்கலை மாணவர்கள் மற்றும் மீனவ மகளிருக்கு சமையல் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. அத்துடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும்மீன்களில் உள்ள சத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
கருத்துக்கள்