advertisement

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அரசு பணியில் இருந்து 8,144 பேர் ஓய்வு.!

மே 31, 2025 3:59 முற்பகல் |

 


 தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப் பணிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ளனர். குரூப் ஏ பணியிடங்களில் 424 பேரும், குரூப் பி பணியிடங்களில் 4,399 பேரும், குரூப் சி-ல் 2,185 பேரும், குரூப் டி-ல் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள்.

இதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் பிற துறை ஊழியர்கள் அடங்குவர். குறிப்பாக, கல்வி, சுகாதாரம், காவல், மற்றும் நிர்வாகத் துறைகளில் பணியாற்றியவர்கள் இதில் உள்ளடங்கலாம். நடப்பு ஆண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஒய்வு பெறுவது இதுவே அதிகம்.

மேலும் இது அரசு அமைப்புகளில் பணியிடங்களில் ஏற்படவிருக்கும் மாற்றங்களையும், புதிய ஆள்சேர்ப்பு தேவைகளையும் எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது பொதுவாக 60 ஆகும். இந்த அதிக எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் தங்கள் சேவைக் காலம் முடிந்து, வயது அடிப்படையில் ஓய்வு பெற்றிருக்கலாம்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement