பள்ளிக்கரணை இளைஞர் கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
ஜூன் 04, 2025 11:47 முற்பகல் |
பள்ளிக்கரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் பிரவீன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது மனைவியின் சகோதரர் தினேஷ் மற்றும் மற்ற நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இரு மாதங்கள் கழித்து, பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில் தினேஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டும், பின்னர் ஜாமீனில் வெளியேறினர். பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கில் உண்மை முடங்கப்பட்டுள்ளதாகவும், சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டிய பிரவீனின் தந்தை கோபி, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை எனக் கருதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
கருத்துக்கள்