advertisement

யூடியூபர்கள் கோபி, சுதாகர் மீது போலீசில் புகார்

ஆக. 07, 2025 9:26 முற்பகல் |

 

யூடியூப்பில் பரிதாபங்கள் சேனல் நடத்தி வரும் கோபி மற்றும் சுதாகர் மீது கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

நெல்லையில் நிகழ்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை தொடர்பாக கோபி மற்றும் சுதாகர் நடத்தி வரும் பரிதாபங்கள் youtube சேனல் மீது கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் கார்த்திக் தனுஷ்கோடி என்பவர் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லையில் அண்மையில் இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் இரு குடும்பங்களுக்கிடையான பிரச்சனையாகும்.

சொசைட்டி பரிதாபங்கள் வீடியோவில் சர்ச்சை கருத்து
ஆனால் இந்த பிரச்சினையை இரு சமூக மோதலாக கோபி சுதாகர் ஆகியோர் சொசைட்டி பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோவை தயாரித்து யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோவில் இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையிலும், இந்த சமுதாயங்களை கேலி செய்யும் வகையிலும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் அடையாளங்களை அந்த வீடியோவில் குறிப்பிட்டு அந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ளனர்.

மேலும், இந்த வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும், இதுபோன்று சர்ச்சைக்குரிய வகைகள் வீடியோக்களை வெளியிடாத வகையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோவில் அவரிடமே அரிவாளை கொடுத்து வெட்ட சொல்ல வேண்டியது தானே என்ற வார்த்தையும் இடம் பெற்றுள்ளது என்பன உள்ளிட்ட வசனங்களை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது, இந்த மனு மீது நடவடிக்கை எப்படி எடுக்கப்பட உள்ளது என்பது தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

இதில் குறிப்பிட்ட இரு சமுதாயங்களின் அடையாளங்களை உள்ளிட்டவற்றை அவர்கள் குறிப்பிட்டிருப்பின் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. காவல் ஆணைய ரகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகாரை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் அல்லது சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement