advertisement

விருத்தாசலத்தில் நாயால் பறிபோன சிறுவன் உயிர்

ஆக. 07, 2025 7:22 முற்பகல் |

பள்ளிக்கு தந்தை அழைத்துச் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் ( 33).  இவருக்கு ஐஸ்வர்யா (28) என்ற மனைவியும், முகித் (7), ரோகித்(5) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில்

ரோகித் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். தினந்தோறும் முருகவேல் தனது மகனை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். அதன்படி நேற்று முருகவேல் தனது மகனை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டார்.குப்பநத்தம் கிராம சாலையில் சென்றபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே ஓடியதாம். உடனே முருகவேல் நாய் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்ப முயன்றார். அந்த சமயத்தில் அவருடைய கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் இருந்த மண் மேட்டின் மீது ஏறி கவிழ்ந்தது.

இதில் ரோகித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமின்றி தப்பிய முருகவேல் அவ்வழியாக வந்தவர்கள் உதவியுடன் தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ரோகித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement