advertisement

சென்னை : விமான நிலையத்தில் 6 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

ஜூன் 20, 2026 3:48 முற்பகல் |

 

நேற்று முன்​தின​மும் தாய்​லாந்திலிருந்து போதைப் பொருட்​கள் கடத்தி வரப்படுவதாக சுங்​கத்​துறை​யினருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்து ஏர் இன்​டெலிஜென்ட் அதி​காரி​கள், நள்​ளிர​வில் தாய்​லாந்து நாட்​டில் இருந்து வரும் விமானங்​கள் மட்​டுமின்றி சிங்​கப்​பூர், கோலாலம்​பூர், இலங்கை ஆகிய இடங்​களில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணி​களை​யும் தீவிர​மாக கண்​காணித்​தனர்.

அப்​போது மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து வந்த பயணி​கள் விமானத்​தில், சென்​னையைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒரு​வர் தாய்​லாந்து நாட்​டுக்கு சுற்​றுலாப் பயணி​யாக சென்​று​விட்​டு, அங்​கிருந்து மலேசியா வழி​யாக சென்​னைக்கு திரும்​பியது சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது.


இதையடுத்து அவரது உடமை​களை சோதனை​யிட்​ட​போது பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​களுக்கு இடையே சுமார் ரூ.6கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா 6 கிலோ இருந்​ததை கண்​டு​பிடித்​தனர்.

இதையடுத்து பயணியை கைது செய்​து, போதைப் பொருளை பறி​முதல் செய்த அதி​காரி​கள், தொடர்ந்து தீவிரமாக வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement