advertisement

முதலமைச்சர் மக்களின் உரிமை பறிப்பது நியாயம் தானா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

மே 30, 2025 11:15 முற்பகல் |

 


மதுரையில் ஜூன் 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ரோடுஷோ மேற்கொள்ள உள்ள நிலையில்,சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் பயணிக்கும் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் ஜூன் 1 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் ரோடுஷோ மேற்கொள்ள உள்ளார். இதற்காக சாலைகளை சரி செய்தல், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் ஸ்டாலின் வரும் சாலைகள் அனைத்தும் தற்பொழுது சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் பயணிக்கும் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாக அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையே இன்று அலுவலப்பட்டுக் கொண்டிருக்கிறது 10 தொகுதியில் இருக்கிற மதுரை மக்கள் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ,அதை திசை திருப்ப ஒரு ஆடம்பர, விழாவை நடத்த மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக, ரோடு ஷோ என்கிற பெயரில் இந்த அலங்கோலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்பொழுது மதுரையில் கூட்டத்தில் பங்கேற்க அவசர அவசரமாக பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பார்த்தார்கள்.ஆனால் அவசர கதியில் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த விழா ரத்து என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது.மக்களுக்காக திட்டமா?அல்லது திட்டங்களுக்காக மக்களா? மக்களுக்காக அரசா? அல்லது அரசுக்காக மக்களா? மக்களுக்காக மந்திரிகளா? அல்லது மந்திரிகளுக்காக மக்களா என்கிற கேள்வி மதுரையில் இருந்து எழுகிறது.

ஆனால் முதலமைச்சர் வீர விளையாட்டான ஜல்லிகட்டை விளம்பர விளையாட்டக மாற்றியதோடு அதை காட்சி பொருளாக கண்காட்சி விளையாட்டாக மாற்றியது ஒரு சாதனை.இன்றைக்கு தன் தந்தையார் பேரிலே நூலகம் அமைத்து அது ஒரு சாதனை,இந்த சட்டசபையில் தொடரில் ஸ்டாலின் கூறுகிறார் கலைஞர் இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு என்றும், ஸ்டாலின் என்றால் சாதனை என்று சொல்லுவார் என்று சொன்னார். அதை நினைக்கிற போது தமிழக மக்கள் சிரிப்பதா? அழுவதா என்று தெரியவில்லை .

ஆகவே வேதனைகளை எல்லாம் ஸ்டாலின் சாதனை என்று மாற்றிக் கொள்வது யார் பேச்சைக் கேட்டு அப்படி சொல்லுகிறார் என்று நமக்கு தெரியவில்லை உண்மை நிலவரம் இதுதான்..மதுரை திமுக ஆட்சியில் பின்தங்கி சென்று விட்டது என்று மக்களே கூறுகிறார்கள்மதுரைக்கு வரும் ஸ்டாலின் மதுரை, தூத்துக்குடி எக்கனாமிக் காரிடார் சாலையை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு முன் வருவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement