இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ கஞ்சா பறிமுதல்
படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை பகுதிக்கு இந்த கஞ்சா பார்சல்கள் கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சரக்கு வாகனத்துடன் நின்றிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.அ.மணக்குடி ஓடக்கரை முனியய்யா கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கதிரவன் உள்ளிட்ட போலீசா்ா அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரை பகுதியில் சரக்கு வாகனத்துடன் நின்றிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.போலீசார் விரட்டிச் சென்று சரக்கு வாகனத்தின் டிரைவரை மடக்கி பிடித்து அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் 3 சாக்கு பைகளில் 90 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவரான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜமாணிக்கம் என்பவரை கைது செய்தனர்.





கருத்துக்கள்