ராணிப்பேட்டை ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழந்த பேராசிரியர் தற்கொலை!
ஜூன் 04, 2025 7:39 முற்பகல் |
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்துக்கு அருகிலுள்ள சித்தேரி பகுதியில், ஆன்லைன் ரம்மியில் பெரும் பண இழப்பால் மன உளைச்சலுக்கு உள்ளான ஒரு கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அருகே வசித்து வந்த தினகரன் (வயது 42), ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். சமீபகாலமாக, ஆன்லைன் ரம்மியில் ஈடுபட்டிருந்த இவர், மொத்தம் ரூ.25 லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது.பண இழப்பால் கடும் மன அழுத்தத்தில் இருந்த தினகரன், இன்று சித்தேரி பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கருத்துக்கள்