திருவிதாங்கோட்டில் இறந்து கிடந்த நாய் அகற்றம்
ஜூன் 11, 2026 6:03 முற்பகல் |
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சியில் IMS பள்ளி அருகாமையில் தெரு நாய் ஒன்று இறந்து அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் சூழ்நிலை உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திருவிதாங்கோடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சபீர் அப்பகுதியில் இறந்த நாயை உடனே அப்புற படுத்துமாறு திருவிதாங்கோடு பேரூராட்சியில் தகவல் கொடுத்தனர் . இதனையடுத்து பேரூராட்சி அதிகாரிகளின் உத்தரவின் பேரில் துப்புரவு பணியாளர்களால் உடனடியாக இறந்த கிடந்த நாயை அப்புறப்படுத்தினார்.





கருத்துக்கள்