advertisement

பாளை.,வஉசி மைதானத்தில் சேதமடைந்த பொருள்கள்!

மே 30, 2025 10:34 முற்பகல் |

 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள வஉசி மைதானத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள பொருள்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 இந்த மைதானத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதேபோல, மின் விளக்குகள், உயர்நிலை மின் விளக்குகள், கழிப்பறை, குடிநீர் தொட்டி உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.எனவே, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் வஉசி மைதானத்தில் உள்ள பொருள்களை விரைவாக சீரமைக்க வேண்டும். சீரமைக்கப்பட்ட பொருள்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அங்கு நடைபயிற்சி, உடல்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement