advertisement

திருத்தணியில் தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை!

ஜூன் 12, 2025 5:33 முற்பகல் |

 

திருத்தணியில் அரசு மருத்துவமனை அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் இயங்கிவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை  வளாகம் அருகில் உள்ள முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.  நேற்று அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியில் வசிக்கும் இளங்கோ என்பவர் முட்புதர் அருகே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் துணியில் சுற்றி வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அந்த குழந்தையை இளங்கோ, மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அதனை தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement