பணியிலிருக்கும் போது மரணமடைந்தவரின் வாரிசுதாரருக்கு அரசு பணி ஆணை வழங்கல்
மே 30, 2025 10:44 முற்பகல் |
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும் போது மரணமடைந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி ஆணையை எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8ம் அணியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய அருணாச்சலம் என்பவர் பணியிலிருக்கும் போது மரணமடைந்தார். அவரது மகள் ராதா என்பவருக்கு என்பவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழ்நாடு அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி அவருக்கு வரவேற்பாளர் பதவிக்கு தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்துள்ளது. அவருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
கருத்துக்கள்