advertisement

தூத்துக்குடி மாநகராட்சி 2500க்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளது: மேயர் தகவல்!

மே 30, 2025 12:15 பிற்பகல் |

 

தூத்துக்குடி மாநகராட்சி 2500க்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளது என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் துணை மேயர் ஜெனிட்டா  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

முன்னதாக மேயர் பேசியபோது "தூத்துக்குடி மாநகராட்சியில் கூடுதலாக 992 சாலைகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அனைத்து சாலைகளும் விரைவாக போடப்படும். மாநகராட்சியில் 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள பிரதான கழிவுநீர் கால்வாயான பக்கிள் ஓடையை  அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் டிஜிட்டல் போர்டுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்படும். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட 2500க்கு மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement