advertisement

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி  உள்ளூர் விடுமுறை!

மே 31, 2025 4:36 முற்பகல் |

 


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற 9-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள், பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. 

இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகிற 14-ந் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement