advertisement

தூத்துக்குடியில்  வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி ரூ.1.5 லட்சம் மோசடி

ஜூன் 13, 2025 3:24 முற்பகல் |

 

தூத்துக்குடியில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி போலியான லிங்க் அனுப்பு ரூ.1.5 லட்சம் மோசடி செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக ஊடகமான முகநூல் (Facebook) பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான புலனம் (Whatsapp) லிங்க் அனுப்பியதில், அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்ததில், இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார். அதற்குப்பின்னர், வாட்ஸ்அப் எண்கள் மூலமாக தொடர்ந்து வழிகாட்டல் வழங்கப்பட்டு, அதிக வருமானம் கிடைக்கும் என உறுதியளித்து ஆன்லைன் டிரேடிங் நடவடிக்கைகளில் ஈடுபடச் சொன்னார்கள். 

இவ்வாறு கூறியதை நம்பி மொத்தமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால், மேலே குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து முதலீட்டுத்தொகையை திரும்பப் பெற முயற்சித்தபோது, பணத்தை திரும்பபெற இயலவில்லை. இதுகுறித்து சந்தேகம் எழுந்தபோது, சம்பந்தப்பட்ட நபர்கள் கூடுதல் பணம் கேட்டனர். பின்னர் தான் மோசடியானது உண்மையென்று புரிந்ததும், உரிய சட்ட நடவடிக்கையை NCRP (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்சொன்ன புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. சகாயஜோஸ் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்களை கைப்பற்றியதோடு, வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு, இது தொடர்பாக 2 பேரை சைபர் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement